close
Choose your channels

'தல' தோனியை தேடி வந்த சி.இ.ஓ பதவி

Monday, April 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தோனிக்கு பிரபல நிறுவனமான கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவி தேடி வந்துள்ளது.
கடந்த 1983ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை பெற்று தந்து சரித்திர சாதனை படைத்தவர் தோனி. இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்று புகழப்படும் தோனி, கேப்டன் பதவியில் விலகினாலும், அவருக்குரிய மரியாதையும் மதிப்பும் சிறிதும் குறையவில்லை.
இந்த நிலையில் உலகக்கோப்பையை வென்று ஆறு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தோனிக்கு சி.இ.ஓ பதவியை வழங்கி கெளரவிப்பதாக கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியே தேடி வந்த தோனிக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.