close
Choose your channels

ரிலீசுக்கு தயாராகும் 'ஆதே கண்கள்' நாயகியின் அடுத்த படம்

Thursday, July 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நெடுஞ்சாலை', 'அதே கண்கள்' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஷிவ்தா நாயர் நடித்து வரும் அடுத்த படம் 'கட்டம்'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சேரன், பிரசன்னா நடித்த 'முரண்' படத்தை இயக்கிய ராஜன் மாதேவ் இயக்கி வரும் இந்த படத்தில் நிவாஸ் மற்றும் நந்தன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஷிவ்தா நாயர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நவீன்- ஜே சி பால் என்ற இரட்டையர் இசை அமைத்து வருகின்றனர். டேமேல் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ரமணன் படத்தொகுப்பில், பிரேம் அரங்கமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சந்தியா ஜனா தயாரிக்கிறார்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி, அதற்கு துணை நின்றவனும் வினை அறுப்பான்" என்பதே "கட்டம்" படத்தின் மையக்கருத்து என்றும் இந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் 'கர்மிக் திரில்லர்" என்ற புதிய யுக்தியை கையாண்டிருப்பதாகவும், இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் இயக்குனர் ராஜன் மாதவ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.