close
Choose your channels

'பவர்பாண்டி' படம் பார்த்து பாராட்டிய இசையமைப்பாளர்

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பல அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கிய திரைப்படம் 'பவர்பாண்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'பவர்பாண்டி' படத்தை தான் பார்த்து ஆச்சரியம் அடைந்ததாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன்ரோல்டான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். தனுஷின் இயக்கம் வீரம் மிகுந்ததாக இருந்ததாகவும், இப்படி ஒரு அபூர்வமான படத்தை கொடுத்த தனுஷூக்கு நன்றி என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா மார்ச் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சீன்ரோல்டானின் பாடலை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.