close
Choose your channels

திருமணத்திற்கு முன்பே நந்தினிக்கு அபார்ஷன். கார்த்திக் தாயாரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

Friday, April 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கார்த்திக்கின் கடைசி விருப்பப்படி அவரது முன்னாள் காதலி வெண்ணிலாவின் கல்லறை அருகே அவரது உடலும் புதைக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக்கின் தாயார் சாந்தி, நந்தினி குறித்து பல திடுக்கிடும் புகார்கள் கூறியுள்ளார். அவற்றில் ஒன்று நந்தினி திருமணத்திற்கு முன்பே அபார்ஷன் செய்து கொண்டவர் என்பதுதான். இதுகுறித்து சாந்தி மேலும் கூறியதாவது:
"கார்த்திக்கை நந்தினி காதலித்தபோது, நடிகை என்று எங்களுக்குத் தெரியாது. திருமணத்துக்கு முன்பே எங்கள் வீட்டில் நந்தினி தங்கியுள்ளார். அப்போது, அவருக்கு அபார்ஷன் ஏற்பட்டதாக அவரே என்னிடம் சொல்லியுள்ளார். அந்தச் சமயத்தில், நாங்கள் சென்னை காரம்பாக்கத்தில் குடியிருந்தோம். வெண்ணிலா என்ற பெண்ணுடன் கார்த்திக் பழகியது நந்தினிக்குத் தெரியும். வெண்ணிலா தற்கொலைக்கு, நந்தினியும் ஒரு காரணம்.
கார்த்திக்கை மிரட்டித்தான் நந்தினி திருமணம் செய்துகொண்டார். அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அன்றைய தினம்கூட கார்த்திக் கறுப்பு வேட்டியை அணிந்து சென்றான். அதன்பிறகு, மதுரையில் திருமணம் நடந்தது. வெண்ணிலா வழக்கில், நந்தினியின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடக்கூடாது என்றுதான் கார்த்திக் சிறைக்குச் சென்றான். நந்தினியின் அப்பா ராஜேந்திரனிடம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கார்த்திக் கடன் வாங்கியது உண்மைதான். ஆனால், பல லட்சங்கள் வாங்கியதாக நந்தினியின் குடும்பத்தினர் சொல்வது பொய்.
நந்தினிக்கு டான்ஸ் என்றால் ரொம்பப் பிடிக்கும். கார்த்திக்கும், நந்தினிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டுக்கு, தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோதான் காரணம். அதில் கார்த்திக்குக்கு காலில் காயமடைந்த பிறகு, நந்தினியின் நடவடிக்கை மாறிவிட்டது. கார்த்திக்குக்கு நந்தினியைவிட வெண்ணிலாவைத்தான் அதிகம் பிடிக்கும். இதனால் அவனுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிவைத்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நந்தினி கூறியபோது, '"கார்த்திக்கை கடந்த 2015-ம் ஆண்டு சந்தித்தது முதல் இன்றுவரை அவரை நான் காதலித்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய காதல் உண்மையானது. என்னைப் பற்றி கார்த்திக்கின் குடும்பத்தினர் அவதூறான தகவல்களைச் சொல்லிவருகின்றனர். அதில், எந்த உண்மையும் இல்லை. குறிப்பாக, எனக்கு அபார்ஷன் ஏற்பட்டதாகச் சொல்வது பொய்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.