close
Choose your channels

ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்த ஆனந்த யாழ்'. முத்துகுமாருக்கு புகழாரம்

Sunday, April 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் எழுதிய 'ஆனந்த யாழ்' என்ற பாடல் ஒவ்வொரு தந்தையின் மனதிலும் ஊடுருவி ஒரு இன்ப அனுபவத்தை கொடுத்தது என்பதை அனைவரும் அறிவர். இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் தயாரிப்பாளருக்கு ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

நா.முத்துகுமார் பாடல்கள் எழுதிய படமான 'யாகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் நா.முத்துகுமாரின் மகன் கலந்து கொண்டார். இந்த படத்தின் பாடல்கள் எழுதியதற்காக நா.முத்துகுமாருக்கு சேரவேண்டிய 25 ஆயிரம் ரூபாயை நா.முத்துகுமாரின் மகனிடம் படக்குழுவினர் அளித்தனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட 'தங்க மீன்கள்' தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் பேசியபோது, 'இந்த படத்திற்கு பாடல் எழுதியிருப்பவர் என் நண்பர் நா.முத்துகுமார். இரண்டு தேசிய விருதுகள் வாங்கும்போது என் அருகில் அவர் இருந்தார். முத்துகுமார் ஒரு ஞானி என்று தான் நினைக்கிறேன். அவரின் குடும்பம் நல்ல நிலைக்கு வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

தங்கமீன்கள் படத்தில் அவரின் `ஆனந்த யாழை... பாடல் மறக்க முடியாதது. என்னை வியாபாரத்தில் சிந்திக்க வைத்த பாடல். தங்கமீன்கள் பாட்டை மொத்தமாக ஒரு ஆடியோ நிறுவனத்திற்கு கொடுத்திருந்தோம். அதில் இந்த ஒரு பாட்டு மூலம் மட்டும் ரூ.1.25 கோடி கிடைத்தது. அடுத்தது ரம்மி என்ற பாடல் மூலம் 75 லட்சம் கிடைத்தது என்று தனது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார் சதீஷ்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.