close
Choose your channels

ரஜினியால் தமிழகத்துக்கு பேராபத்து: நாஞ்சில் சம்பத்

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுமே கருத்துகூறி விட்ட நிலையில் தற்போது இரண்டாவது சுற்றாக மீண்டும் கருத்து கூறி வருகின்றனர். அதில் குறிப்பாக ஒருசில அரசியல்வாதிகள் ரஜினி அரசியலுக்கு வந்துவிட கூடாது என்பதில் குறியாக உள்ளனர். அவர்களில் ஒருவர் அதிமுக தினகரன் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்.

ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஏற்கனவே கருத்து கூறிய நாஞ்சில் சம்பத், 'சிஸ்டம் சரியில்லை என்று கூறியதில் இருந்தே அவருக்கு அரசியலே தெரியவில்லை' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் இதுகுறித்து கூறுகையில், 'ரஜினி அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து. அவர் அரசியலுக்கே வரக் கூடாது. போர் வரும்போது பார்ப்போம் என கூறுவதெல்லாம் பூச்சாண்டி காட்டுகிற வேலை. ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று கூறினார்.

மேலும் தினகரனுக்காக தமிழகம் முழுவதும் நீதிகேட்கும் பயணம் ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.