close
Choose your channels

விஜய்யின் 'புலி'யில் நானும் ஒரு கதாநாயகிதான். நந்திதா

Wednesday, July 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு நாயகிகள் இருந்த நிலையில் மூன்றாவது நாயகியாக படத்தில் நுழைந்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், புலி படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் விஜய்யுடன் நடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி ஆகியவற்றை மனம்திறந்து கூறியுள்ளார்.

'புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஒருநாள் போன் செய்து இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என கூறியபோது, இரண்டு பெரிய ஹீரோயின்கள் இருக்கும் படத்தில் எனக்கு ஒரு சின்ன ரோல் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இயக்குனர் என்னிடம் எனது கேரக்டர் குறித்து கூறியபோதுதான் மூன்று கதாநாயகிகளில் நானும் ஒருவர் என்பதை புரிந்து கொண்டேன்.


'புலி' படத்தில் விஜய்யுடன் ஏழு நாட்கள் நடித்தேன். முதல் நாள் நடிக்கும்போது ஒரு பெரிய சூப்பர் ஸ்டாருடன் நடிக்கின்றோம் என்ற பயத்துடன் நடித்தேன். ஆனால் அவர் மிக எளிமையாக, உடன் நடிக்கும் நடிகர்களுடன் இயல்பாக பழகுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். சக நடிகர், நடிகைகளுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்பை வார்த்தைகளால் கூற முடியாது.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எனது பிறந்த நாள் வந்தது. அந்த சமயத்தில் விஜய் உள்பட 'புலி' படக்குழுவினர்கள் முன் எனது பிறந்த நாளை கொண்டாடியது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது.' என்று நந்திதா கூறினார்.

நந்திதா தற்போது இடம் பொருள் ஏவல், அஞ்சல, உப்புக்கருவாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.