close
Choose your channels

சிம்புவை வெளியேற விடமாட்டேன் - நாசர்

Thursday, April 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவது குறித்து நேற்று வந்த செய்தி குறித்து நடிகர் சங்கத்தலைவர் நாசர் கூறியபோது, 'சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவதாக ஊடகங்களில் மட்டுமே செய்திகள் வெளியாகி வருகின்றன. எங்களுக்கு இதுகுறித்து சிம்பு தரப்பில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. ஒருவேளை சிம்பு வெளியேறுவதாக எங்களுக்கு தகவல் வந்தால் கண்டிப்பாக அவரை வெளியேற விடமாட்டோம். அவரை அழைத்து பேசி அவருடைய பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வோம்' என்று கூறினார்.

மேலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சரத்குமார், ராதிகா உள்பட அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாகவும், அழைப்பிதழ் கிடைத்ததால்தான் நிரோஷா, ராம்கி, விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் 'தமிழ் நடிகர்கள் சங்கம்' என புதிய நடிகர் சங்கம் உருவாகவுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து நாசர் கூறியபோது, 'தேர்தல் நேரத்தில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்காக சங்கம் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. சங்கம் அதை பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்காது' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.