close
Choose your channels

'பாகுபலி'யால் தள்ளிப் போனதா நயனின் 'மாயா?

Tuesday, July 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் வரும் வெள்ளியன்று, ஜூலை 24ஆம்தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது.


'மாயா' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் 'பாகுபலி', படம் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தின் வசூலை டிஸ்டர்ப் செய்ய விரும்பாததால், 'மாயா' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. 'பாகுபலி படத்தை ஸ்ரீதேனாடாள் மூவீஸ் நிறுவனம்தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தில் 'நெடுஞ்சாலை நாயகன் ஆரி, நயன்தாரா, லட்சுமி ப்ரியா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தையும் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யவிரும்பிய படக்குழுவினர், தெலுங்கு டப்பிங் பணியை தற்போது விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்த படத்தை தவிர நயன்தாரா மேலும் இது நம்ம ஆளு, தனி ஒருவன், காஷ்மோரா, திருநாள், நானும் ரெளடிதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.