close
Choose your channels

'பாகுபலி'க்கு இணையான மும்மொழி படத்தில் நயன்தாரா?

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காஷெட்டி நடித்த தேவசேனா கேரக்டருக்கு முதலில் நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், நயன்தாராவின் தேதிகள் கிடைக்காததால், அந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு சென்றதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில் 'பாகுபலி' படத்தை மிஸ் செய்த நயன்தாரா, தற்போது அதற்கு இணையான பட்ஜெட்டில் தயாராகும் படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சிரஞ்சிவியின் 150வது படமான 'கைதி நம்பர் 150' படத்தை அடுத்து அவருடைய 151வது படத்தில் தான் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து போராடிய வீரம் மிகுந்த மன்னன் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிரஞ்சிவீ நடிக்கவுள்ளார். 'பாகுபலி' படத்திற்கு இணையான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்க கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதாகவும், இயக்குனர் தரப்பில் கேட்கும் மொத்தமான கால்ஷீட் தேதிகள் குறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சங்கமித்ரா' படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருந்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.