close
Choose your channels

சசிகலா முதல்வர் ஆனபின் பொறுக்கிகளை அடக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

Saturday, February 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்த போது பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழர்களை தனது சமூக வலைத்தளத்தில் 'பொறுக்கி' என்று கூறி இழிவுபடுத்தினார். இதனால் சுவாமிக்கு கமல்ஹாசன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது சசிகலா அனேகமாக அடுத்த வாரம் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படும் நிலையில் மீண்டும் தமிழர்களை பொறுக்கி என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறி அனைவரின் ஆத்திரத்திற்கு ஆளாகியுள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'வரும் திங்கள் அன்று சசிகலா முதல்வர் பதவியை ஏற்றால் பொறுக்கிகளை அவர்தான் கட்டுப்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
சசிகலாவை முதல்வர் ஆவதையே இன்னும் பெரும்பாலானோர் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது தற்போது சுப்பிரமணியன் சுவாமியின் டுவீட்டும் சேர்ந்து கொண்டதால் சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் ஆத்திரத்தை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.