close
Choose your channels

நயன்தாராவின் திருநாளில் இணையும் கோபிநாத்

Tuesday, November 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் கோபிநாத், திரையுலகிற்கு புதியவர் இல்லை. ஜெயம் ரவி நடித்த 'நிமிர்ந்து நில்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜீவா-நயன்தாரா நடித்து வரும் 'திருநாள்' படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கோபிநாத் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கிராமத்து கதையம்சம் கொண்ட 'திருநாள்' படத்தில் கோபிநாத் அவர்கள் புகழேந்தி என்ற கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும், அவருடைய கேரக்டர் நயன்தாரா கேரக்டருக்கு உதவி செய்யும் கேரக்டராக படத்தில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சமீபத்தில் பிரபல பாடகர் விஜய்ஜேசுதாஸ் 'மாரி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதேபோல் கவுதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பிரபல பாலிவுட் பாடகர் பாபா ஷீகல் என்பவரும் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பாடகர்கள் போலீஸ் வேடங்களில் நடித்து வரும் நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கோபிநாத்தும் போலீஸ் கேரக்டரில் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.