close
Choose your channels

ஆக்சன் நாயகியாக மாறுகிறார் நிகில்கல்ராணி

Thursday, August 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிய 'டார்லிங்' படத்தின் நாயகி நிகில்கல்ராணி , அந்த படத்தை அடுத்து பாபிசிம்ஹாவுடன் 'கோ 2' மற்றும் ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் எழில் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதை நேற்று நிகில்கல்ராணி உறுதி செய்துள்ளார்.


SIIMA விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ள நிகில்கல்ராணி, அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'எழில் படத்தில் விஷ்ணு ஜோடியாக நான் நடிக்கவிருப்பது உண்மைதான். இந்த படத்தில் நான் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றேன். அதுமட்டுமின்றி இந்த படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.

.ஏற்கனவே நிகில்கல்ராணி மலையாள படம் ஒன்றிலும், 'யாகாவராயினும் நா காக்க' என்ற படத்திலும் சிறு சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சீரியஸான சண்டைக்காட்சிகளில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் துபாயில் இருந்து சென்னை திரும்பியதும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரொமான்ஸ், ஆக்சன் என வித்தியாசமாக இந்த படத்தில் நிகில்கல்ராணி கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.