close
Choose your channels

மனைவி புகார் எதிரொலி: தாடி பாலாஜி மீது கொலைமிரட்டல் வழக்கு

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்த நிலையில் கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் நித்யா புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் தனது கணவர் பாலாஜி தன்னை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனுமீது மாதவரம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் மீண்டும் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை நித்யா அளித்தார்.
இதனையடுத்து தற்போது சென்னை கமிஷனரின் உத்தரவின் பேரில் தாடி பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.