close
Choose your channels

வரவேற்கப்படும் 11 . ஓடி ஒளியும் 122

Monday, February 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்றபோது பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆவடி தொகுதிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு அந்த தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். அதேபோல் மதுரை சோழவந்தான் தொகுதி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த 122 எம்.எல்.ஏக்களும் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்போதைக்கு அவர்களுடைய வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், 122 எம்.எல்.ஏக்கள் மீதான கோபம் மக்களுக்கு இன்னும் குறையவில்லை என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவாகி வரும் கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது.
ஜனநாயக நாட்டில் மக்கள் மட்டுமே மகத்தான சக்தி என்பதையும், மக்களின் குரலே மகேசன் குரல் என்பதை மக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகளுக்கு புரிய வைக்க வேண்டிய சரியான நேரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.