close
Choose your channels

ஓபிஎஸ்-க்கு எதிராக போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம். உருவ பொம்மை எரிக்க முயற்சி

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திய வினாடியில் இருந்து தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை பிடிக்க சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் ஊடகங்களில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து பேட்டி அளித்து வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா ஆதரவு அதிமுகவினர் சென்னை போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஓபிஎஸ் அவர்களுக்கு எதிராக சசிகலா ஆதரவு அதிமுகவினர் கோஷம் எழுப்பி வருவதாகவும், முதல்வரின் உருவ பொம்மையை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், காவல்துறையினரால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.