close
Choose your channels

ஓபிஎஸ், சசிகலா குறித்து கமல்ஹாசன் கூறியது என்ன?

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகிறார். அந்த வகையில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று அவர் கூறிய கருத்தை பார்ப்போம்.

எனக்கும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் உள்ளது. தற்போதைய அரசியல் கீழ்த்தரமனதாக இருக்கிறது. நான் பன்னீர் செல்வத்திற்கு நண்பனோ அல்லது எதிரியோ அல்ல. ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கருவியாக பன்னீர் செல்வம் உள்ளார்.

தமிழக மக்களை போலவே சசிகலாவின் தகுதி குறித்து எனக்கும் தெரியாது. ஒருவர் கூட நீண்ட காலம் இருந்ததற்காக அவருக்கு அரசியலுக்கு வரும் தகுதி கிடையாது.

அரசியல்வாதிகள் மீது எனக்கு கோவம் இருக்கிறது. அரசியல்வாதிகள் ஓன்று கடவுள்கள் அல்ல. மக்களின் எண்ணங்களுடன் அவர்கள் விளையாடக்கூடாது. குதிரை பேரத்திற்கு அனுமதிக்ககூடாது.

பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று நான் எண்ணவில்லை. பன்னீர் செல்வத்தை அரசமைக்க அனுமதிக்க வேண்டும்

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.