close
Choose your channels

பாலாஜி தரணீதரனின் 'ஒரு பக்க கதை': சென்சார் தகவல்கள்

Wednesday, September 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம் நடிகர் விஜய்சேதுபதியின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். நினைவிழந்த நிலையில் அவர் பேசிய வசனங்கள், 'ப்பாஆஆ... என்ற ஒரே வார்த்தை அவரை நீண்ட நாட்களுக்கு நினைவில் வைக்கும்படி இருந்தது.

இந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து பாலாஜி தரணிதரன் இயக்கிய அடுத்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. 'ஒரு பக்க கதை' என்ற டைட்டிலில் தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே மிக விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ், முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். வாசன் விஷூவல் வெண்ட்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.