close
Choose your channels

ஆரவ்வுக்காக காத்திருப்பேன்: வெளியேறிய ஓவியாவின் வெகுளித்தனமான பேச்சு

Sunday, August 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிவிட்டதாக நேற்று முன் தினம் மாலையில் இருந்தே செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அது உறுதியானது. மனநல மருத்துவர் மற்றும் பிக்பாஸ் ஆகியோர்களுடன் ஆலோசனை செய்த ஓவியா, முதலில் மீண்டும் அந்த வீட்டில் தொடர்வதாக கூறினாலும் பின்னர் இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை வெளியேறிய அனைவருமே மற்ற பங்கேற்பாளர்களை கட்டிப்பிடித்து அழுது உணர்ச்சிவசப்பட்டு விடைபெறுவர். ஆனால் அதன்பின்னர் கமல்ஹாசனிடம் அவர்களை பற்றியே குற்றம் சொல்வார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் ஓவியா எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல், சாதாரணமாக வெளியேறினார். வெளியேறும்போது கூட அவர் பொய்யாக நடிப்பதையோ அல்லது பொய்யாக நடிப்பவர்களை காணவோ விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா பின்னர் கமல்ஹாசனுடன் கலந்துரையாடினார். அப்போது கூட வீட்டில் உள்ளவர்களை அவர் ஒரு வார்த்தை கூட குறை சொல்லவில்லை என்பது அவரது மேன்மையான குணத்தை எடுத்து காட்டியது. பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்று டைட்டிலை வெற்றி பெறுங்கள் என்று ஆடியன்ஸ் கூறியபோது, 'உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் என்னுடைய நலனுக்காக இது நான் எடுத்த முடிவு' என்று கூறினார். மேலும் ஆரவ்வை தான் இன்னும் காதலிப்பதாகவும், அவருக்காக காத்திருக்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.