close
Choose your channels

தேவைப்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம். பாக்.பிரதமர்

Thursday, September 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடகொரியா மட்டுமே கடந்த சில வருடங்களாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தங்களிடம் குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதம் தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்' என்றும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியபோது, 'வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ரகசியங்களை விற்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி, 'இந்தியா தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதன் மீது அணு ஆயுதங்களை பிரயோகப்படுத்த தயங்க போவதில்லை என்று பேசினார். இந்த பேச்சில் இருந்து சுஷ்மா ஸ்வராஜின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.