close
Choose your channels

கூவத்தூர் சென்ற பாண்டியராஜன் தடுத்து நிறுத்தம்.

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகலா ஆதரவு தரப்பி எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய விருப்பத்தின் பேரிலே இருப்பதாகவும் இருவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் கூவத்தூருக்கு நேரடியாக சென்று அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கூவத்தூருக்கு அமைச்சர் பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களை கோவளம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கூவத்தூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் போலீஸார் இதனை அனுமதிக்க கூடாது என்றும் சசிகலா ஆதரவு தரப்பு எம்.எல்.ஏக்கள் போலீசார்களை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.