close
Choose your channels

எம்.ஜி.ஆர், என்.எஸ்.கே ஆகியோர்களுக்கு பாண்டவர் அணி மரியாதை

Friday, October 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. நேற்று சரத்குமார் அணியின் தரப்பினர் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, இன்று விஷால் அணியினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி உள்பட மொத்தம் 24 பேர் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கூட்டத்திற்கு முன்னர் விஷால் உள்பட பாண்டவர் அணியினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகின் நகைச்சுவை சக்கரவர்த்தியாக இருந்த கலைவாணர் என்.எஸ்.,கிருஷ்ணன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்துள்ள நாசருக்கு கமல்ஹாசன் தனது ஆதரவை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருதரப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தல் தற்போது சூடிபிடித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.