close
Choose your channels

ஆளுனரை சந்திக்கின்றனர் பன்னீர்செல்வம்-பழனிச்சாமி அணிகள்

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பான நிகழ்வுகளுக்கு இன்று அல்லது நாளை முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் போட்டியில் இருந்த சசிகலா சிறைக்கு சென்றுவிட்டதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ஆளுனரின் அழைப்புக்காக காத்திருந்தன.

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அவரது ஆதரவு அமைச்சர்கள் 10 பேர்களும் இன்று இரவே ஆளுனரை சந்திக்கவுள்ளனர். இருவரையும் சந்தித்த பின்னர் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்கள் இன்று இரவோ அல்லது நாளையோ தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 118க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களின் கையெழுத்துகளுடன் வந்தால் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்படும் என கவர்னர் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் அனுப்பியதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் எம்.எல்.ஏக்களின் கையெழுத்துகளுடன் கூவத்தூரில் இருந்து பழனிச்சாமி சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.