close
Choose your channels

ஓபிஎஸ் ஆதரவாளர் திடீர் கைது. முதல்வரின் முதல் அதிர்ச்சி நடவடிக்கை

Friday, February 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல் குழப்ப நிலை இருந்த காரணத்தால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அனைத்தும் தேங்கி இருந்தன. புதிய முதல்வர் நேற்று பதவியேற்றதால் இனிமேலாவது மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி தலைமையிலான ஆட்சியின் முதல் நடவடிக்கையாக பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மதுரையை சேர்ந்த அதிமுக முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் சாலைமுத்து என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்த இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் வீட்டை காலி செய்யும்படி பொதுப்பணித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது ஆதரவாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் ஆட்சி அமைத்த பின்னரும் கோஷ்டி சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.