close
Choose your channels

கமல்-ரஜினி நாயகியுடன் நடிக்கும் பார்த்திபன்

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த 80களின் கனவு நாயகி ஜெயப்ரதா மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு தமிழ் படத்தில் நடிக்கின்றார். 'கேணி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பார்த்திபனும் நடிக்கவுள்ளார்.

இதுவொரு பீரியட் படம். கடந்த 1956ஆம் ஆண்டு கேரள மாநிலம் உருவானபோது தமிழ்நாடு, கேரளா ஆகிய இருமாநில எல்லையில் உள்ள கிணறு ஒன்று யாருக்கும் சொந்தம் என்ற பிரச்சனை எழுகிறது. அந்த பகுதி மக்களின் தண்ணீர்தேவையை பூர்த்தி செய்யும் இந்த கிணறு குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணுவதுதான் இந்த படம். இந்த கிணறு இருக்கும் வீட்டின் உரிமையாளராக ஜெயப்ரதாவும், இந்த பிரச்சனையை தீர்க்க உதவும் முக்கிய கேரக்டரில் பார்த்திபனும் நடித்து வருகின்றனர்.

பிரபல மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் இயக்கும் இந்த படத்தில் நாசர், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை தற்போதைய முல்லை பெரியாறு பிரச்சனையை ஞாபகப்படுத்துவதாக இருக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஜெயப்ரதாவுடன் நடிப்பது குறித்து பார்த்திபன் கூறுகையில், 'எனது குருநாதர் கே.பாக்யராஜ், 'ஒரு கைதியின் டைரி' படத்தின் இந்தி ரீமேக் படம் 'ஆக்ரி ரஸ்தா' படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அந்த படத்தில் அமிதாப் மற்றும் ஜெயப்ரதா நடித்திருந்தனர். அதற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஜெயப்ரதாவுடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.