close
Choose your channels

எங்கள் தொகுதி எம்.எல்.ஏவை காணவில்லை. போலீசில் புகார் அளிக்கும் பொதுமக்கள்

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது கவர்னர் கையில் இருந்தாலும் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று உள்ளது. சசிகலாவுக்கு வெகுசிலரின் ஆதரவு மட்டுமே உள்ளது. மேலும் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை சிறை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். திருப்பூர் வடக்கு தொகுதி பொதுமக்கள் ஒருபடி மேலே போய் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமாரை காணவில்லை என்றும் அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓபிஎஸ் அவர்கள்தான் முதல்வராக வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரன் அவர்களை காணவில்லை என வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் தமிழகத்தின் பல தொகுதி பொதுமக்களும் தங்கள் எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்களை காணவில்லை என்று தொடர்ந்து கூறப்படும் புகார் கவர்னருக்கு சென்றால் அவரது நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.