close
Choose your channels

என்னை போலவே பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும்: கமல்ஹாசன்

Thursday, October 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்த உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு முதலில் அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் முதல் பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் கருப்புப்பணம் ஒழியும் என்றும் அவர்கள் நம்பிக்கை அளித்தனர்.

ஆனால் பொருளாதார மேதைகளும், எதிர்க்கட்சிகளும், முன்னாள் நிதியமைச்சரும் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப்பணம் ஒழியவில்லை என்றும் இந்த நடவடிக்கையே உள்நோக்கம் கொண்டது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் உலகநாயகன் கமல்ஹாசன், 'பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அவசரப்பட்டு பாராட்டு தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாகவும், தன்னை போலவே பிரதமரும் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரினால் அவருக்கு இன்னொரு சலாம் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி கூட தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதால் பிரதமரும் அதை செய்வார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.