close
Choose your channels

சசிகலா வீட்டு முன் சங்கு ஊதிய 5 பேர் கைது

Tuesday, February 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து அறிய முடிகிறது. இருப்பினும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் பரிபூரண சம்மதத்துடன் அவர் வரும் 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த 10 பேர் தங்களை அதிமுக தொண்டர்கள் என்று கூறிக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் நேற்று நள்ளிரவில் நுழைந்தனர். அவர்கள் சின்னம்மா வாழ்க என்று கோஷமிட்டு சென்றதால் காவல் பணியில் இருந்த போலீசாரும் அவர்களை தடுப்பு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் அனுமதித்தனர்.

ஆனால் திடீரென அவர்களில் ஐந்து பேர் மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து சசிகலா தங்கியிருந்த 'வேதா இல்லம்' முன் ஊதினர். அந்த நேரத்தில் பால்கனியில் இருந்த சசிகலா இதை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக 'வேதா இல்லத்தில் இருந்து போலீசார் சங்கு ஊதிய ஐந்து பேர்களை கைது செய்தனர். தற்போது அவர்கள் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.