close
Choose your channels

குஜராத் சாலையில் பாகிஸ்தான் கொடி. போலீசார் விசாரணை

Thursday, May 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு இந்திய ராணுவர்களை கொலை செய்ததோடு அவர்களின் உடல்களையும் சிதைத்த கொடூரமான சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ஆனந்த் என்ற பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்திய ராணுவ வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கொடியை சாலையில் வரைந்து அதன் மேல் மிதித்து நின்றவாறு இந்திய கொடிகளை கையில் ஏந்தி பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, சாலையில் வரையப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியின் மீது வெள்ளை பெயிண்ட் அடித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.