close
Choose your channels

அமைச்சர் செல்லூர் ராஜூவை சிறை வைத்துள்ளரா சசிகலா? போலீசில் அதிர்ச்சி புகார்

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஈசிஆரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் சிறை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைபிடித்து வைத்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர்களும், தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வந்து ஒருநாள் முழுதாக ஆகிவிட்ட நிலையில் ஆட்சி அமைக்க யாரையும் அவர் அழைக்கவில்லை. இதனால் தமிழக அரசியலில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது.

இந்நிலையில் ஆட்சி அமைக்க ஆளுனர் அழைக்கும் வரை அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களை ஈசிஆரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சசிகலா சிறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை வி.கே.சசிகலா சிறைபிடித்து வைத்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையத்தில் மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.