close
Choose your channels

விளம்பரத்தில் நடிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். ராஜ்கிரண்

Tuesday, April 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் நடித்து கொண்டிருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் விளம்பரப்படத்திலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அதே நேரத்தில் கோடி கொடுத்தாலும் விளம்பரப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறும் ஒருசில நடிகர்களும் இதே துறையில் உள்ளார்கள். இந்த நிலையில் விளம்பர படத்தில் நடிப்பது குறித்து 'பவர்பாண்டி' நாயகன் ராஜ்கிரண் கூறியதாவது:
ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஆனால் விளம்பரத்தில் நடிப்பது என்பது முழுக்க முழுக்க காசுக்காக நடிப்பதே ஆகும். விளம்பரத்தில் நடிப்பதை நான் கேவலமாக நினைக்கின்றேன்.
ஒரு பொருளை பற்றி ஒன்றுமே தெரியாமல் கோடிக்கணக்கான பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பது என்னை பொறுத்தவரையில் பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
என்னை பொதுமக்கள் நடிகனாக மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவனாக பார்க்கின்றனர். நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால், ராஜ்கிரணே சொல்லிவிட்டார், இந்த பொருள் நன்றாகத்தான் இருக்கும் என்று என்னை நம்பி வாங்குவார்கள், நான் விளம்பரப்படுத்தும் பொருள் ஒரு தப்பான பொருளாக இருந்தால் அது, பொதுமக்களுக்கு செய்யும் துரோகமாக கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.