close
Choose your channels

ரூ.10 கோடி மோசடி செய்த பிரபல நகைச்சுவை நடிகர் கைது

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூ.10 கோடி கொடுத்தால் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக வாக்குறுதி கொடுத்து ரூ.10 கோடி கமிஷனை பவர்ஸ்டார் சீனிவாசன் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி கடன் வாங்கி தராமல் மோசடி செய்ததாகவும் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்தும் பவர்ஸ்டார் சீனிவாசன் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன், இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
பவர்ஸ்டார் சீனிவாசன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.