close
Choose your channels

பிரேமம்' பட ஒளிப்பதிவாளரின் 9 ஆண்டு காதலுக்கு கிடைத்த வெற்றி!

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்தியாவின் சிறந்த காதல் படங்களில் ஒன்று 'பிரேமம்' என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்த இந்த காதல் வெற்றி படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஆனந்த் கே.சந்திரனின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

ஆம், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த் கே.சந்திரன், ஸ்வாதி பிரதாப் என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஒரு பள்ளி விழாவில் ஒன்பது ஆண்டுகளுக்கு சந்தித்த இவர்கள் முதலில் நண்பர்களாகி பின்னர் காதலர்களாக மாறினர். இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் ஆனந்த் கே.சந்திரன் - ஸ்வாதி திருமணம் நேற்று கொச்சியில் இந்து முறைப்படி நடந்தது. மலையாள திரையுலகமே திரண்டு வந்து இந்த காதல் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.