close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியா உறுதி: காட்டி கொடுத்த டுவீட்

Saturday, August 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா மற்றும் ஜூலியின் வெளியேற்றத்திற்கு பின்னர் வரவேற்பை இழந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த பிரபல தொலைக்காட்சி நடிகை ப்ரியா பவானி சங்கர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று வெளிவந்த தகவலை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கர் தனது டுவிட்டரில், 'இப்போதைக்கு டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன். உங்களது அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. மீண்டும் ஒரு பிரபல மீடியா மூலம் உங்களோடு தொடர்பில் இருப்பேன்' என்று பதிவு செய்துள்ளார்.

எனவே இந்த டுவீட் மூலம் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓவியாவுக்கு மாற்றாக அவர் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி நடிகை, தொகுப்பாளர் என தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ப்ரியா செல்வது பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓரளவுக்கேனும் தூக்கி நிறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.