close
Choose your channels

சிபிஐ கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை

Thursday, July 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி அறிமுகமாகிய 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி, அதன்பின்னர் நடித்த பெரும்பாலானபடங்கள் கவர்ச்சியான வேடங்களாகவே இருந்தது. இந்நிலையில் அவர் முதன்முதலாக ஒரு துணிச்சலான சிபிஐ கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தை பிரபல இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்த ஆர்.பி.பட்நாயக் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஜெயம் ரவி அறிமுகமான 'ஜெயம்' உள்பட ஒருசில தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கவர்ச்சி மற்றும் ரொமான்ஸ் கேரக்டர்களில் ப்ரியாமணியை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் மீண்டும் விஜயசாந்தி போல ஒரு போல்டான கேரக்டரில் பார்ப்பார்கள். இந்த படத்திற்காக சிபிஐ அதிகாரி போன்ற மேனரிசத்திற்கு பயிற்சி எடுக்கும்படி ப்ரியாமணியிடம் கூறியுள்ளேன். அவரும் இந்த படத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்து வருகிறார்' என்று ஆர்.பி.பட்நாயக் கூறியுள்ளார். இந்த படத்தை இவரே தயாரித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.