close
Choose your channels

ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கையை படமாக்கும் பிரபல நடிகை

Wednesday, May 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக உள்ளார். அதுமட்டுமின்றி அவ்வப்போது பிராந்திய மொழிகளில் படங்களை தயாரித்தும் வருகிறார்.
அந்த வகையில் பிரியங்கா சோப்ரா தயாரிக்கும் அடுத்த படம் இந்திய தேசிய கீத பாடலை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம். தாகூர் 17 வயது இளைஞராக இருந்தபோது அன்னபூர்ணா என்ற பெண்ணின் மீது அவருக்கு ஏற்பட்ட காதலுடன் படம் தொடங்குகிறதாம். இந்த படத்திற்கு 'நளினி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணாவை தாகூர் நளினி என்றுதான் அழைப்பதுண்டாம்.
'நளினி' படத்தயாரிப்பை பிரியங்கா சோப்ராவின் தாயார் உறுதி செய்துள்ளார். இந்த படம் குறித்து அவர் கூறுகையில், 'நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தயாரிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த படம் உணர்வுபூர்வமாக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும்' என்று கூறினார். இந்த படம் பெங்காலி, மராத்தி, இந்தி மொழிகளில் உருவாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.