close
Choose your channels

நடிகர் சங்கத்தில் புகுந்த காளான் தான் விஷால். கலைப்புலி எஸ்.தாணு தாக்கு

Thursday, March 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் நான்கு அணி போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக டி.சிவா அணி, வாபஸ் பெற்று ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்த பின்னர் கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது:

நடிகர் சங்கத்தை இதுவரை நான் தவறாக சொன்னதே இல்லை. இனியும் எந்த எந்த காலத்திலும் தவறாக சொல்லமாட்டேன். ஆனால் அப்படிப்பட்ட நடிகர் சங்கத்தில் ஒரு காளான் புகுந்துவிட்டது. அவர்தான் விஷால். அவரிடம் ஆணவம், மமதை அதிகமாக உள்ளது. அவருடைய பேச்சும், அணுகுமுறையும் தவறாக உள்ளது

விஷால் அணியில் இருக்கும் கவுதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ஒரு கோடி ரூபாய் கொடுத்தது நான். இதை கவுதம் மேனனிடம் விஷால் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் விஷால் நடித்த 'பாயும் புலி' படத்திற்கு இதேபோன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது அவர் ஓடி ஒளிந்து கொண்டார்.

இன்று ஓட்டு கேட்டு பல தயாரிப்பாளர் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் அவரை வைத்து படம் தயாரித்த எந்த தயாரிப்பாளர் வீட்டுக்காவது விஷால் செல்வாரா? அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களும், அவருடைய படத்துக்கு பணம் கொடுத்த பைனான்சியர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

ஞானவேல்ராஜாவின் பல பிரச்சனைகளை தீர்த்தது தயாரிப்பாளர் சங்கம்தான். அதேபோல் ஆந்திராவில் நிறைய முறை ரெட் கார்டு வாங்கிய பிரகாஷ்ராஜ் தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி குறை சொல்லும் முன் கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துவிட்டு பின்னர் பேச வேண்டும்.

நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் இலவசமாக நடிப்போம் என்று கூறிய நடிகர்களான விஷால், ஆர்யா, ஜீவா உள்பட அனைவரும் அதற்கு பின்னர் பல படங்கள் நடித்துவிட்டார்கள். ஆனால் நடிகர் சங்கத்திற்காக நடிப்பதாக கூறிய படம் என்ன ஆனது? கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்று விஷால் தம்பி கூறுகிறார். அவருடைய வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று கலைப்புலி தாணு பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.