close
Choose your channels

விஜய்-ஸ்ருதிஹாசன் பாடிய முழுமையான பாடல் ரிலீஸ்

Friday, July 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள 'ஏண்டி ஏண்டி' பாடல் இன்று மாலை ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த பாடலின் முழு வரிகள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. கவியரசர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடலுக்கு இசையமைத்தவர் தேவிஸ்ரீ பிரசாத். இனி இந்த பாடலின் முழு வரிகளை பார்ப்போம்.

விஜய்: வானவில் வட்டமாகுதே
வானமே கிட்ட வருதே

ஸ்ருதிஹாசன் : மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே

விஜய்: இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
காலங்கள் வேஷம் போடுதே
அடி ஏண்டி ஏண்டி என்ன மாத்துற?
ரெண்டு பூவக் கொண்டு என்னத் தாக்குற
அடி ஏண்டி ஏண்டி கண்ணச் சாய்க்கிற?
எம் புத்திக்குள்ள கத்தி வீசுற
*
விஜய்: கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி

ஸ்ருதிஹாசன் : கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி

விஜய்: ஏ அழகின் மானே
வா மடிமேலே

ஸ்ருதிஹாசன் : புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?

விஜய்: ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற

விஜய்: பிஞ்சு மொழி சொல்லச் சொல்லப்
பேச்சுக்குள்ள தோடி ராகம்

ஸ்ருதிஹாசன் : முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்

விஜய்: தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே

ஸ்ருதிஹாசன் : இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?

விஜய்: ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.