close
Choose your channels

ஆர்.கே.நகரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிசினஸ்கள் என்ன ஆச்சு?

Wednesday, April 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகரில் கடந்த மாதம் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அப்பகுதி மக்கள் வழக்கமான பார்த்து வந்த வேலையை தற்காலிகமாக கைவிட்டு புதிய வேலைவாய்ப்புகளை தாங்களாகவே உருவாக்கி கொண்டனர். இதனால் அவர்கள் செல்வசெழிப்பில் மிதந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
உதாரணமாக வேட்பாளர்கள் பின்னால் ஒரு கொடியை தூக்கி கொண்டு சென்றால் போதும் மூன்று வேளை சாப்பாடு மற்றும் ரூ.500 சம்பளம். மேலும் தலைவர் ஒருவர் வாக்கு கேட்க வருகிறார் என்றால் அவருக்கு போடப்படும் மாலைகள், அவர் மீது தூவப்படும் பூக்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வருமானம் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு தெருவுக்கு வாக்கு கேட்க வரும் வேட்பாளரின் சின்னத்தை கோலமாக வீட்டின் எதிரே போட்டால் ரூ.100 முதல் ரூ.500வரை அன்பளிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணி செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அவருடன் வருபவர்களுக்கு அந்த பகுதி மக்களே சைவ, அசைவ உணவுகளை மணக்க மணக்க சமைத்து சாப்பாடு போட்டுள்ளனர். இதற்கும் மெனு வகைக்கு ஏற்ப ரூ.10000 முதல் ரூ.15000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்.கே.நகரில் கொடிகட்ட பறந்த புதிய பிசினஸ்கள் திடீரென தேர்தல் ரத்து அறிவிப்பு காரணமாக காணாமல் போய் தற்போது மக்கள் தங்களுடைய வழக்கமான பணியை தொடங்கிவிட்டனர். இருப்பினும் எப்பொழுது தேர்தல் நடைபெறுமோ, அப்போது இந்த பிசினஸ்கள் மீண்டும் முளைத்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.