close
Choose your channels

தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரலாம்! ரஜினி வரக்கூடாதா? பிரபல நடிகர்

Friday, May 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இன்றைய அரசியல் பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பதை பார்த்தால் அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயப்படுவதாகவே புரிந்து கொள்ள முடிகிறது என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய தமிழக அரசியல் வெற்றிடத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம் என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் அவருடன் பல திரைப்படங்களில் நடித்து இருப்பவருமான ராதாரவி, ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கருத்து கூறியபோது, 'ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் ஆணைபடி தான் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.

இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை' என்று கூறினார். ராதாரவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.