close
Choose your channels

ராகவா லாரன்ஸ் படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

Monday, August 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் ரிலீஸ் ஆன தினமே 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டத்தினால் பெரும் சிக்கலை படக்குழுவினர் சந்தித்தனர். அந்த சிக்கலை தீர்ப்பதற்குள் ராகவா லாரன்சுக்கும், இயக்குனர் சாய்ரமணிக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் குழுவினர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் கலவரத்தில் இறந்த காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை காண்பிக்கும் காட்சி ஒன்று வரும். இந்த காட்சிக்காக உண்மையிலேயே கலவரத்தில் இறந்த காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை காட்ட இயக்குனர் சாய்ரமணி முடிவு செய்தாராம். இந்த பொறுப்பை படக்குழுவினர் முக்கிய நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டு அவர் இதுகுறித்த விபரங்களை இண்டர்நெட்டில் தேடி ஒருசில புகைப்படங்களை கண்டுபிடித்து இயக்குனரிடம் கொடுத்துள்ளார். இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஆனால் தற்போது இந்த புகைப்படங்களில் இருப்பவர்களில் ஒரு அதிகாரி உயிருடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இண்டர்நெட்டில் டவுன்லோடு செய்யும்போது தெரியாமல் இவருடைய புகைப்படமும் டவுன்லோடு ஆகியுள்ளது. இதை சமீபத்தில் அறிந்த அந்த காவல்துறை அதிகாரி அதிர்ச்சி அடைந்து படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தயாரிப்பாளர் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் தற்போது அந்த அதிகாரியின் நீதிமன்ற வழக்கையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.