close
Choose your channels

இளைஞர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடத்தும் அடுத்த போராட்டம்

Wednesday, March 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது அதைவிட முக்கிய பிரச்சனையான நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் களமிறங்கவுள்ளார்.
நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க ராகவா லாரன்ஸ் காவல்துறையினர்களிடம் கேட்ட அனுமதி கிடைத்துவிட்டதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
விவசாயிகளை காப்பதற்காக நடத்தப்படும் இந்த உண்ணாவிரதத்தில் இளைஞர்கள் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.