close
Choose your channels

இதையாவது தமிழகத்திற்கு செய்ய வேண்டும்: தமிழருவி மணியனிடம் கூறிய ரஜினி

Friday, June 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் வருகை குறித்து சூசகமாக போர் வரும்போது பார்த்து கொள்வோம் என்று கூறினார். மேலும் அவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்தும் வருகிறார். அவர்களில் ஒருவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து தமிழருவி மணியன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியபோது, 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகவேண்டும் என்று துடிப்பதாக பலர் தவறாக எண்ணி கொண்டிருக்கின்றனர். அவருக்கு தெளிவான அரசியல் பார்வை இருக்கின்றது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், பதவி மட்டுமே தேவையில்லை என்பதே அவரது எண்ணம்

ரஜினிகாந்த் தனது மனதில், 'ஒரு சாதாரண மனிதராக தமிழகத்திற்கு வந்த தனக்கு, செல்வமும், புகழும் அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள் தமிழ் மக்கள். அவர்களுக்காக அரசியல் அமைப்பை சுத்தப்படுத்தும் பணியையாவது தொடங்கி வைக்க வேண்டும் என்று அவர் விரும்புவதாக தமிழருவி மணியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.