close
Choose your channels

கடவுளே வாழ்த்தியது போல உணர்கிறேன். சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு ராஜமெளலி பதில்

Tuesday, May 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சினிமாவை உலக அளவில் தலைநிமிர்த்திய ஒரு படம் என்று எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை கூறினால் அது மிகையில்லை. உண்மையான பிரமாண்டம், உண்மையிலேயே ஹாலிவுட் தரம் கொண்ட இந்த படங்களின் வெற்றியை பார்த்து பாலிவுட் படவுலகினர்களே பொறாமைப்படும் அளவுக்கு உள்ளது. இதுவரை இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாக்கள் என்று நினைத்திருந்த வெளிநாட்டினர்களுக்கு தென்னிந்தியாவிலும் உலக தரத்தில் படம் எடுக்கும் இயக்குனர்கள் இருக்கின்றார்கள் என்பதை புரிய வைத்த படங்கள் இவை.

இந்த நிலையில் இந்த படத்தை கோலிவுட் பிரபலங்களும் இந்திய திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இணைந்துள்ளார். ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில், 'இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ள 'பாகுபலி 2' பட இயக்குநர் ராஜமெளலி கடவுளின் குழந்தை. அவருக்கும் அவரது படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் பாராட்டுக்கு ராஜமெளலி தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார். 'தலைவா.... கடவுளே வாழ்த்தியது போல உணர்கிறேன். இதை விடப் பெரிது வேறு ஏதும் எனக்கும் எனது டீமுக்கும் வேறு இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.