close
Choose your channels

தாதா சாகேப் பால்கே விருது வென்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Wednesday, April 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது. விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு அரசியல்வாதிகளும், கோலிவுட் திரையுலகினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், 'மரியாதைக்குரிய கே.விஸ்வநாத்தின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரதிற்கு நான் தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் ரஜினிகாந்த் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், திறமையானவர்களுக்கு எப்போதுமே மதிப்பளித்து அவர்களின் சாதனைகளை பாராட்டி வருபவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதா சாகேப் விருது மட்டுமின்றி கே.விஸ்வநாத் அவர்கள் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.