close
Choose your channels

'விஐபி 2' விழாக்களில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்? செளந்தர்யா

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த 'விஐபி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் சரி, சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி தனுஷின் மனைவியும், இயக்குனர் செளந்தர்யாவின் சகோதரியுமான ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து செளந்தர்யா கூறியபோது, 'அக்கா ஐஸ்வர்யாவின் உதவியும் சப்போர்ட்டும் எனக்கு எப்போதும் இருந்தது உண்டு. அவர் இரண்டு படங்களின் ஸ்க்ரிப்டில் பிசியாக இருப்பதால் விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் தனுஷ் உள்பட எங்கள் படக்குழு அனைவருக்கு ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவித்தார்' என்று கூறினார்.

மேலும் 'விஐபி 2' படம் எடுக்க வேண்டும் என்ற ஐடியா எங்களுக்கு முதலில் இல்லை. நான் முதலில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்தியிருந்தேன். அந்த சமயத்தில் நானும் தனுஷூம் டிஸ்கஸில் இருந்தபோது 'விஐபி 2' ஒன்லைன் கிடைத்தது. அதை அப்படியே விரிவுபடுத்தி இந்த படம் இன்று உங்கள் முன்னாள் வந்துவிட்டது. இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான இசை தேவைப்பட்டதால் நாங்கள் சீன் ரோல்டானை அணுகினோம். படத்தின் பாடல்களை கேட்டு அனிருத் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் வசுந்தரா கேரக்டரில் சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய கேரக்டர் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறிய செளந்தர்யா, வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டரை கஜோல் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்காது' என்று கூறினார். மேலும் இந்த படம் குறித்து செளந்தர்யா மேலும் கூறியபோது, 'இந்த படம் விஐபி படத்தின் அடுத்தபாகமாக சரியான வகையில் அமைந்துள்ளது. கண்டிப்பாக எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.