close
Choose your channels

நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் யார்? கடிதம் ஏற்படுத்திய திருப்பம்

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்த்திக்கின் தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என அவர் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் போலிசார் நந்தினியின் தந்தை ராஜேந்திரனை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பின்னர் இந்த தற்கொலை வழக்கு வேறு வழக்காக மாறவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திக் தனது கடிதத்தில் எழுதியுள்ளதாவது: "என் மரணத்துக்குக் காரணம், என் மாமனார் ராஜேந்திரன்தான் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்னையும் என் மனைவியையும் பணத்துக்காக ராஜேந்திரன் பிரித்துவிட்டார். நான் பல முறை நந்தினியிடம் போனில் பேச முயற்சித்தேன். அதையும் அவர் தடுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன். மேலும், நான் என் மாமனாரிடம் கெஞ்சிப் பேசினேன். அதையும் அவர் கேட்கவில்லை. இது, எனக்கு மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. என்னுடன் நந்தினியைப் பேசவிடாமல் தடுக்கும் வகையில் என்னுடைய போன் காலை பிளாக் செய்துவிட்டார். எங்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட வைத்துவிட்டார். நான் சாக, முழுக்க முழுக்க காரணம் என் மாமனார் ராஜேந்திரன்தான்" என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் கார்த்திக் தனது சகோதரி ரம்யாவுக்கு தனியாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ரம்யா, அம்மாவைப் பார்த்துக்கொள். எனக்கு வாழத் தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாகத்தான் வாழ்ந்தேன். என்னால் வாழ முடியவில்லை. இனிமேல் நான் இருப்பது வேஸ்ட். என் கௌரவம், மரியாதை போய்விட்டது. அம்மாவைப் பார்த்துக்கொள். என் கடைசி ஆசை என்னவென்றால், வெண்ணிலாவைப் புதைத்த இடத்தின் அருகே என்னைப் புதைத்துவிடுங்கள். வெண்ணிலா பக்கத்தில் என்னைப் புதையுங்கள். ஃப்ளீஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.