close
Choose your channels

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வடிவேலு வராதது ஏன்?

Monday, April 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது விஷால் அணிக்கு பக்கபலமாக இருந்த வைகைப்புயல் வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது அனைவரையும் ஆச்சரியத்தையும் பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் சங்க நிர்வாகிகள் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அவர் வரவில்லை என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால் வடிவேலு ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை அவரது தரப்பில் இருந்து தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாளே வடிவேலு தன்னுடைய அம்மா உடல்நலமின்றி இருப்பதாக செய்தி வந்ததால் உடனடியாக அவர் மதுரை கிளம்பி சென்றுவிட்டதாகவும், போட்டி நடைபெற்ற தினத்தில் அவர் சென்னையிலேயே இல்லை என்றும், இதுகுறித்து அவர் ஏற்கனவே தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலிடம் தெரிவித்துவிட்டதாகவும், இதுதான் உண்மையான காரணமே தவிர அவருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.