close
Choose your channels

இந்திய அரசின் அனுமதியை பெற்றது சிவகார்த்திகேயன் பட நிறுவனம்

Saturday, July 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புரமோஷன் கன்சல்டண்ட் என்ற பணியில் கோலிவுட் திரையுலகில் பல படங்களில் பணியாற்றிய ஆர்.டி.ராஜா, கடந்த ஆண்டு '24ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'ரெமோ' என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆர்டி ராஜா தனது '24ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தின் பெயருக்கு டிரேட்மார்க் சான்றிதழை பெற்றுள்ளார். காப்புரிமை என்று கூறப்படும் இந்திய அரசின் டிரேட் மார்க் சான்றிதழை இந்நிறுவனம் பெற்றுள்ளதால் இனி இதே பெயரிலோ அல்லது இந்த பெயரை ஒட்டியோ வேறு புதிய நிறுவனங்கள் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'ரெமோ', 'வேலைக்காரன்' படங்களை அடுத்து '24ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பில் 'நேரம்' நாயகன் நிவின்பாலி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.