close
Choose your channels

புதிய ரூபாய் நோட்டுக்களில் நோட்டுக்களில் எழுதியிருந்தால் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

Thursday, April 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களில் பேனா அல்லது பென்சிலால் ஏதாவது எழுதியிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ அந்த நோட்டு செல்லாது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்று முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி ரூபாய் நோட்டில் எழுதியிருந்தால் அந்த நோட்டுக்களை வாங்க மாட்டோம் என்று மறுக்கக்கூடாது என அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: `புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலோ, கிறுக்கல்கள் இருந்தாலோ, அல்லது நிறம் மங்கியிருந்தாலோ பல வங்கிகள் நோட்டுகளை பெற்றுக்கொள்ள மறுப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

டிசம்பர் 31, 2013 தேதியிடப்பட்ட சுற்றறிக்கையில், பொதுமக்களோ, வங்கி அலுவலர்களோ ரூபாய் நோட்டுகளில் எழுதக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தற்போது எழுதப்பட்ட, நிறம் குன்றிய, அழுக்கடைந்த நோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மீறும் வங்கி அலுவலர்கள் மற்றும் வங்கி கிளைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.